Song: Nilavaa Nada Nadanthu
Year: 2022
Viewed: 4 - Published at: 4 years ago

நிலவா நட நடந்து...

பல்லவி

நிலவா நட நடந்து
எனைக்கடந்து போறது ...?
அழகாய் மனசுக்குள்ளே
அடமழையாய் தூறுது...

அடடா சிறுநொடியில்
இதயம் இடம் மாறுது..
மெதுவா மெதுவா..
மெதுவா உயிர் வழிந்தே ஓடுது......

அடியே பெண்ணே நீயும்
கண்ணால் ஏதோ
சொன்னாயே...
அழகே பேரழகே
சொட்டுச் சொட்டாய்
கொன்னாயே...
எனை இடிச்சாய்
மின்னலே கிறங்கடிச்சாய் ...
கரண்டடிக்கும் கண்களால் கவிவடிச்சாய்...(2)

சரணம்-01

ரோசாப்பூ பூகூட
ஓந் தேகம் கண்டு
ஒம்மேல காதல் கொள்ளும்..

லேசா நீ முகம் பார்த்து
சிரிச்சாலே போதும்
மனசெல்லாம் பாடல் துள்ளும்..

துளி சிரிப்பிலே கவிழ்த்தாயடி..
உனை மறக்கவே முடியாதடி..

எனை இடிச்சாய் மின்னலே கிறங்கடிச்சாய் ...
கரண்டடிக்கும் கண்களால் கவிவடிச்சாய்.....(2)

சரணம்-02

அன்பாலே விரல்கோதி கதைபேசிக்கொண்டு
உன்னோடு நான் வாழ்கிறேன்...

கண்ணாலே நீ
காதல் சொல் போதும்...
அன்பே உயிரிலும் உனைத் தாங்குவேன்...
எனைத்தாண்டியே போகாதடி... உனைத்தாங்கவேன் பூப்போலடி..

எனை இடிச்சாய் மின்னலே கிறங்கடிச்சாய் ...
கரண்டடிக்கும் கண்களால் கவிவடிச்சாய்.....

( Shadhir Ahamed )
www.ChordsAZ.com

TAGS :